Friday 20 February 2015

மதுவே மகிழ்ச்சி .....

அன்பினை வழங்கும் நல்ல
அழகிய குடும்பம் வேண்டாம் ....
பிஞ்சி கை நீட்டி வரும்
பிள்ளையின் பாசம் வேண்டாம்....
காலை கதிரின் ஒளி..
கண்களால் ரசிக்க வேண்டாம் ...
மாலையின் எழிலின்
மகிழ்ச்சியும் எனக்கு வேண்டாம்..
நிலவினை ரசிக்க வேண்டாம் ..நல
உணவினை ருசிக்க வேண்டாம் ....
பூவினை பார்த்து பார்த்து
பூரிப்பும் அடைய வேண்டாம் .....
மதியை கெடுக்கும் நல்ல
மதுவின் போதை போதும்...
நாற்றம் "மது " இருந்தாலும்
நான் மகிழ "மது" போதும் ...
சாக்கடை ஓரம் வீழ்ந்திடினும்
சகலமுமாய் எனக்கு மது போதும் ...
உறவெல்லாம் தூற்றிடினும்
உற்ற குடி எனக்கு போதும் ...
என் குடியே அழிந்தாலும்
மது குடித்தே நான் மாளவேண்டும் ....

No comments:

Post a Comment