தைப் பொங்கல்
"தை"யல் வந்தாள்
"தை"யல் வந்தாள்
தத்தை போலே
"தை"யல் வந்தாள்
"கதிர் "கொண்ட எழில் காட்டி
எதிர் புலர்ந்து இனிது வந்தாள்
"பச்சரிசி" சிரிப்பு காட்டி
பக்குவமாய் படர்ந்து வந்தாள்
"கரும்பு" போன்று சுவையாகி ....
விரும்பும் இனிப்பாய் விளங்கி வந்தாள் ..
"மஞ்சள்" போல மங்கலமாய்
மங்கையவள் மலர்ந்து வந்தாள்
பொங்கிடும் எழில் கொஞ்ச
பொலிவுடனே பொங்கி வந்தாள்
வளம் பெருகும் வாழ்வும்
நலம் கொஞ்சும் ஆண்டும் தர
"தை" என்னும் தையலவள்
"தைப் பொங்கலாய்" தரணி வந்தாள்.