Wednesday 17 February 2016

நன்றி காதலே .....!!!

சிறை உடைத்த நான் 
மகிழ்ச்சி யின் மனச்சிறையில்
புது மகிழ்ச்சி கண்ட புராதன நாட்கள்... 

நினைவுகள் என்னோடு 
நேசங்களை பகிர்ந்துகொண்டு 
பாசங்கள் பரிசளித்த காலங்கள் ..

நட்பு அன்போடு கலந்து 
உறவுகளை எனக்கு அறிமுகபடுத்திய 
உன்னத நாட்கள்... 

விண்ணளவு பாசப்பிணைப்பை 
என் இதயம் சுமந்து 
சுகம் கண்ட தருணங்கள் ...

உணவு முதல்  ஊசி வரை 
என் பாசத்துக்கும் அன்புக்கும் பாலமாகி 
நட்பிற்கு நங்கூரம் அமைத்த 
நளினமான சுகங்கள் ......

அன்பின் முற்றிய அடுத்த நிலை 
என் நட்புக்கும் உறவுக்கும் 
சொந்தங்களுக்கும் சூரிய வெப்ப 
வேலி போட்டு சுட்டெரித்த 
சூழ்நிலை சுவடுகள் .....

நிஜம் என்பது நேசத்தின் நிகழ்காலம் 
நேசம் நட்பின் கடந்த காலம் என்பதை 
என் மனக்கண் மறைந்து இருந்து பார்த்து 
பரிதவித்த ரணங்கள் .....

எல்லாம் காதலே ....!
நீ செய்த சூழ்ச்சி ...

உன் மன்மத அன்பால் 
மனங்களின் அன்புக்கு 
மரண வாசகம் எழுதி விட்டாய் ...

காதலுக்கு வேலி இல்லை. 
அனால்.... 
என் நட்பு என்னும் 
வேலிக்கு 
போலி என்று 
புகழ் மாலை சூட்டிய..
உன் புண்ணிய அன்புக்கு 
நன்றி காதலே .....!!!

Thursday 14 January 2016

தைப் பொங்கல்

தைப் பொங்கல்
"தை"யல் வந்தாள்
"தை"யல் வந்தாள்
தத்தை போலே
"தை"யல் வந்தாள்
"கதிர் "கொண்ட எழில் காட்டி
எதிர் புலர்ந்து இனிது வந்தாள்
"பச்சரிசிசிரிப்பு காட்டி
பக்குவமாய் படர்ந்து வந்தாள்
"கரும்புபோன்று சுவையாகி ....
விரும்பும் இனிப்பாய் விளங்கி வந்தாள் ..
"மஞ்சள்போல மங்கலமாய்
மங்கையவள் மலர்ந்து வந்தாள்
பொங்கிடும் எழில் கொஞ்ச
பொலிவுடனே பொங்கி வந்தாள்
வளம் பெருகும் வாழ்வும்
நலம் கொஞ்சும் ஆண்டும் தர
"தைஎன்னும் தையலவள்
"தைப் பொங்கலாய்தரணி வந்தாள்.