Thursday 26 February 2015

நாகரீக நாணம் .

ஜீன்ஸ் டாப்ஸ் அணிந்தாலும் எங்களுக்குளும் நாணம் இருக்கிறது.....தலை குனிந்து நடப்பதற்கு பதில் தலையில் துணியை சுற்றியபடி நடக்கிறோம் ....இது நாகரீக நாணம் .....


Friday 20 February 2015

சுடும் காதலி ....

நீ தான் என் வாழ்வின் ஆதாரம்..
சில நாட்களில் இன்பமாய் எனக்கு நீ...
சில நாட்களில் துன்பத்தின் சுவடாய் நீ..
நடுங்கும் குளிரின் நாட்களில்
உன்னை தேடி என் மனது...
என்னோடு நெருக்கமாய் இருக்கும்
நேரங்களில் குளிரை அணைக்க துடிக்கிறது,,,
உனக்காகவே என் வேர்வை துளிகள் ...
என் உணவை உருவாக்கி ...
உயிரை வளர்த்தவள் நீ ...
என் வாழ்வின் ..
முதல் பாகம் முதல்
முடியும் தருணம் வரை
என்னுடனே இருக்கும்
வெயில் என்னும் காதலி ....
நீ சுட்டால் கூட சுகம் தான் எனக்கு.......

நல் நட்போடு வாழ்ந்து பார் .....

நல் நட்போடு வாழ்ந்து பார் .....
தொடும் தூரத்தில் சூரியன் தெரியும் ....
விரல்கள் ஸ்பரிசத்தை நாடாமல்..
உழைப்பை விரும்பி செய்யும் ....   
உறவுகள் உனக்கு 
உண்மையான அன்பை வழங்குவதை நீ உணர்வாய் ...
தோல்விகள் உனக்கு 
துணையாய் வந்து வெற்றிகளின்
படியில் உன்னை வழி நடத்தும்..
ரோஜாக்கள் கூட கனி ஆகாதா?
என்ற கனிவு நெஞ்சுக்கு சொந்தகாரன் ஆவாய்..
நல் நட்போடு வாழ்ந்து பார் ..
நாளைய உலகும் 
நாளைய வாழ்வும் 
நமக்கு தான் .....

நாங்கள் நகரத்து பிச்சைகாரர்கள் ...

நாங்கள் நரகத்தை
நகரத்தில் அனுபவிக்கும்
நாகரீக ஆவிகள் ....
இறப்பை தள்ளிப்போட
இரப்பை தேடிய
இழிநிலை ஜென்மங்கள் ....
பிறரின் புண்ணியத்தில்
பசியாற்றும் பாவ பதர்கள் ......
கை தூக்கி விட ஆள் இன்றி
கையேந்தும் நிலை பெற்றோர் ...
பசிக்கு பசியாற்ற
பச்சை தண்ணீர் கொடுபவர்கள் ...
மானம் எனும் மரியாதையை
தானம் கேட்டதால் இழந்தவர்கள் ...
கால் தழுவிய பாதையில்
உடல் தழுவி உறங்குபவர்கள் ...
நாங்கள் நகரத்து பிச்சைகாரர்கள் ...

மதுவே மகிழ்ச்சி .....

அன்பினை வழங்கும் நல்ல
அழகிய குடும்பம் வேண்டாம் ....
பிஞ்சி கை நீட்டி வரும்
பிள்ளையின் பாசம் வேண்டாம்....
காலை கதிரின் ஒளி..
கண்களால் ரசிக்க வேண்டாம் ...
மாலையின் எழிலின்
மகிழ்ச்சியும் எனக்கு வேண்டாம்..
நிலவினை ரசிக்க வேண்டாம் ..நல
உணவினை ருசிக்க வேண்டாம் ....
பூவினை பார்த்து பார்த்து
பூரிப்பும் அடைய வேண்டாம் .....
மதியை கெடுக்கும் நல்ல
மதுவின் போதை போதும்...
நாற்றம் "மது " இருந்தாலும்
நான் மகிழ "மது" போதும் ...
சாக்கடை ஓரம் வீழ்ந்திடினும்
சகலமுமாய் எனக்கு மது போதும் ...
உறவெல்லாம் தூற்றிடினும்
உற்ற குடி எனக்கு போதும் ...
என் குடியே அழிந்தாலும்
மது குடித்தே நான் மாளவேண்டும் ....

Thursday 19 February 2015

ஏழ்மை தமிழ்

என் தமிழின் 
ஏழ்மை நிலை
என்ன வென்று நானுரைப்பேன் .....
கண் என் தமிழ் என்று 
கவி உரைத்த நாட்கள் எல்லாம் 
காணாமல் போனதன் 
காரணம் என்ன சொல்ல ....
தமிழ் பண்ணில் கூட 
தமிழின் தரம் 
தாழ்தின்று போனதேன் .....
தமிழர் 
மூச்சி விடும் ஒலி 
மாற்று மொழியாய் 
போனதன் காரணம் நானறியேன் ...
பிறப்பு முதல் இறப்பு வரை 
பிறமொழியை தமிழ் என்று 
தமிழரே பேசும் நிலை என்னுரைப்பேன் .....
தரணி போற்றும் பெருமை கொண்ட 
தமிழ் என்னும் தங்க மொழி.....
தரமது தாழ்த்து இன்று 
தத்து மொழி ஆகியதால் அகம் நொந்தேன்....
தமிழ் அறிந்தோரும் 
தமிழை பேச 
தயங்கும் நிலை கண்டு ...
தனியே நின்று ததும்பு கின்றேன்..
ஒண்ட வந்த மற்ற மொழி 
ஓங்கி வளர்ந்த நம் மொழியை 
ஒடுக்கி ஆளும் நிலை கண்டு 
ஓரம் நின்று புலம்பு கின்றேன்....
நான் பிறந்த நாள் தொட்டு 
நான் பேசும் தமிழ் மொழி 
நல்ல பழந்தமிழ் 
இல்லை என்று உணரும் பொது - என் 
நாடி எல்லாம் நடுங்கு கின்றேன் ....
என் தமிழை கெடுத்ததிலே 
எனக்கும் பங்கும் உள்ளதை 
எண்ணி எண்ணி வாடுகின்றேன் .....

Friday 6 February 2015

விளையாட்டு ....

விளையாடச் சென்றது 
குழந்தை ...
கையில் 
கைப்பேசியோடு ....

வேண்டும் இன்னுமொரு சுதந்திரம் ..

விதிமுறை மதிக்காத 
வீணரிடம் இருந்து
வேண்டும் இன்னுமொரு சுதந்திரம் ...

சதி செய்யும் கூட்டத்தின் 
விதியில் இருந்து விலகிட 
வேண்டும் இன்னுமொரு சுதந்திரம் ...

புகழுக்காக புது கூட்டம் கூட்டும் 
புண்ணியரிடமிருந்து புலம்பெயர 
வேண்டும் இன்னுமொரு சுதந்திரம் ...

இருமாப்பில் இயங்கும் 
இருட்டு மனிதரிடம் இருந்து 
வெளிச்சத்திற்கு வந்திட 
வேண்டும் இன்னுமொரு சுதந்திரம் ...

பிரிவினை வேண்டியே 
பிற வினை செய்திடும் 
கெடு வினை மாந்தரை 
புறத்தினில் தள்ளவே..
வேண்டும் இன்னுமொரு சுதந்திரம் ...

போரும் குழப்பமும் 
தீதும் கொடுமையும் 
தீ இட்டு கொளுத்திட்டு 

சாந்தமும் அமைதியும் 
சமமாய் நிலவிட 
சத்தியமாய் வேண்டும்...
 இன்னுமொரு சுதந்திரம் ...

Thursday 5 February 2015

இல்லாள் .....

அன்பு அகம் கொண்டாள்..
அரவணைக்கும் மனம் கொண்டாள் ..

பால் மிஞ்சும் நிறம் என்னும் 
பாசத்தை பகிர்ந்து கொண்டாள் ...

கொழுநன் மனமொத்த 
வழுவிலா குணம் கொண்டாள் ..

உறவோடு உறவாடும் 
உன்னத நெறிகொண்டாள்...

முகை கொண்ட இதழோடு
மதி ஒத்த முகம் கொண்டாள் ..

தன்னோடு தன் வீடும் -தான் 
சிறந்தது என்னும் 
தற்பெருமை தான்  இல்லாள் ... 

வஞ்சமது தான் தங்கும்
நெஞ்சமது  இல்லாள் ..

பஞ்சமது வீட்டில் என்று 
பகலும் நிலை கொள்ளாள் ...

இன்பம் தங்கும் 
இனிமை பொங்கும் 
இல்லம் ஆளும் 
இல்லாள் .....

ஊனமானவன் ....

கரம் ....
கண் ...
மூளை ....
கால் ...
இதயம் ....
எல்லாம் இருந்தும் 
ஊனமானவன் தான் ...
" தந்தை" இன்றி 
இத் தரணியில் வாழ்பவன் .....

Wednesday 4 February 2015

நில் என்ற சொல் ...

அன்பே ....
உலகத்தின் இயக்கத்தை 
நிறுத்த 
உன் உதடு உச்சரிக்கும் 
"நில்"
என்ற ஒரு சொல் போதும் ....

Sunday 1 February 2015

அம்மா ....

வார்த்தைகள்  கோர்த்து 
வர்ணனை செய்ய முடியாத 
வானுயர்ந்த படைப்பவள்....

வளம் கொஞ்சும் 
வாசனை மலர் தோட்டம் ..
வரிசையாய் நின்றாலும் 
ஈடு செய்யா
எழில் அவள் .....

பாசமோடு நேசத்தையும் 
நட்போடு உறவைவும் 
பற்று கொண்டு இணைத்தாலும்..
பதிலீடற்ற பாலவள்.

எண்கள் முடிவினும் 
எண்ணி முடித்திடா..
எல்லை இன்றி விரிந்தவள் ...

காலமெல்லாம்,..
நம்முடனே ..
கடவுளாய் வாழ்ந்திடும் 
நம் நலம் நாடும் 
அன்னையவள் .......

விலகல் ....

அன்பே ....
விலகிப்போவதாய் இருந்தால் கூட ...
இருளாய் தான் விலகிப்போவேன் ..
உன் வாழ்வில் 
வெளிச்சத்தை கொண்டுவர ...