Friday 20 February 2015

நாங்கள் நகரத்து பிச்சைகாரர்கள் ...

நாங்கள் நரகத்தை
நகரத்தில் அனுபவிக்கும்
நாகரீக ஆவிகள் ....
இறப்பை தள்ளிப்போட
இரப்பை தேடிய
இழிநிலை ஜென்மங்கள் ....
பிறரின் புண்ணியத்தில்
பசியாற்றும் பாவ பதர்கள் ......
கை தூக்கி விட ஆள் இன்றி
கையேந்தும் நிலை பெற்றோர் ...
பசிக்கு பசியாற்ற
பச்சை தண்ணீர் கொடுபவர்கள் ...
மானம் எனும் மரியாதையை
தானம் கேட்டதால் இழந்தவர்கள் ...
கால் தழுவிய பாதையில்
உடல் தழுவி உறங்குபவர்கள் ...
நாங்கள் நகரத்து பிச்சைகாரர்கள் ...

No comments:

Post a Comment