அன்பு அகம் கொண்டாள்..
அரவணைக்கும் மனம் கொண்டாள் ..
பால் மிஞ்சும் நிறம் என்னும்
பாசத்தை பகிர்ந்து கொண்டாள் ...
கொழுநன் மனமொத்த
வழுவிலா குணம் கொண்டாள் ..
உறவோடு உறவாடும்
உன்னத நெறிகொண்டாள்...
முகை கொண்ட இதழோடு
மதி ஒத்த முகம் கொண்டாள் ..
தன்னோடு தன் வீடும் -தான்
சிறந்தது என்னும்
தற்பெருமை தான் இல்லாள் ...
வஞ்சமது தான் தங்கும்
நெஞ்சமது இல்லாள் ..
பஞ்சமது வீட்டில் என்று
பகலும் நிலை கொள்ளாள் ...
இன்பம் தங்கும்
இனிமை பொங்கும்
இல்லம் ஆளும்
இல்லாள் .....
அரவணைக்கும் மனம் கொண்டாள் ..
பால் மிஞ்சும் நிறம் என்னும்
பாசத்தை பகிர்ந்து கொண்டாள் ...
கொழுநன் மனமொத்த
வழுவிலா குணம் கொண்டாள் ..
உறவோடு உறவாடும்
உன்னத நெறிகொண்டாள்...
முகை கொண்ட இதழோடு
மதி ஒத்த முகம் கொண்டாள் ..
தன்னோடு தன் வீடும் -தான்
சிறந்தது என்னும்
தற்பெருமை தான் இல்லாள் ...
வஞ்சமது தான் தங்கும்
நெஞ்சமது இல்லாள் ..
பஞ்சமது வீட்டில் என்று
பகலும் நிலை கொள்ளாள் ...
இன்பம் தங்கும்
இனிமை பொங்கும்
இல்லம் ஆளும்
இல்லாள் .....
No comments:
Post a Comment