Friday 6 February 2015

வேண்டும் இன்னுமொரு சுதந்திரம் ..

விதிமுறை மதிக்காத 
வீணரிடம் இருந்து
வேண்டும் இன்னுமொரு சுதந்திரம் ...

சதி செய்யும் கூட்டத்தின் 
விதியில் இருந்து விலகிட 
வேண்டும் இன்னுமொரு சுதந்திரம் ...

புகழுக்காக புது கூட்டம் கூட்டும் 
புண்ணியரிடமிருந்து புலம்பெயர 
வேண்டும் இன்னுமொரு சுதந்திரம் ...

இருமாப்பில் இயங்கும் 
இருட்டு மனிதரிடம் இருந்து 
வெளிச்சத்திற்கு வந்திட 
வேண்டும் இன்னுமொரு சுதந்திரம் ...

பிரிவினை வேண்டியே 
பிற வினை செய்திடும் 
கெடு வினை மாந்தரை 
புறத்தினில் தள்ளவே..
வேண்டும் இன்னுமொரு சுதந்திரம் ...

போரும் குழப்பமும் 
தீதும் கொடுமையும் 
தீ இட்டு கொளுத்திட்டு 

சாந்தமும் அமைதியும் 
சமமாய் நிலவிட 
சத்தியமாய் வேண்டும்...
 இன்னுமொரு சுதந்திரம் ...

No comments:

Post a Comment