Thursday 19 February 2015

ஏழ்மை தமிழ்

என் தமிழின் 
ஏழ்மை நிலை
என்ன வென்று நானுரைப்பேன் .....
கண் என் தமிழ் என்று 
கவி உரைத்த நாட்கள் எல்லாம் 
காணாமல் போனதன் 
காரணம் என்ன சொல்ல ....
தமிழ் பண்ணில் கூட 
தமிழின் தரம் 
தாழ்தின்று போனதேன் .....
தமிழர் 
மூச்சி விடும் ஒலி 
மாற்று மொழியாய் 
போனதன் காரணம் நானறியேன் ...
பிறப்பு முதல் இறப்பு வரை 
பிறமொழியை தமிழ் என்று 
தமிழரே பேசும் நிலை என்னுரைப்பேன் .....
தரணி போற்றும் பெருமை கொண்ட 
தமிழ் என்னும் தங்க மொழி.....
தரமது தாழ்த்து இன்று 
தத்து மொழி ஆகியதால் அகம் நொந்தேன்....
தமிழ் அறிந்தோரும் 
தமிழை பேச 
தயங்கும் நிலை கண்டு ...
தனியே நின்று ததும்பு கின்றேன்..
ஒண்ட வந்த மற்ற மொழி 
ஓங்கி வளர்ந்த நம் மொழியை 
ஒடுக்கி ஆளும் நிலை கண்டு 
ஓரம் நின்று புலம்பு கின்றேன்....
நான் பிறந்த நாள் தொட்டு 
நான் பேசும் தமிழ் மொழி 
நல்ல பழந்தமிழ் 
இல்லை என்று உணரும் பொது - என் 
நாடி எல்லாம் நடுங்கு கின்றேன் ....
என் தமிழை கெடுத்ததிலே 
எனக்கும் பங்கும் உள்ளதை 
எண்ணி எண்ணி வாடுகின்றேன் .....

No comments:

Post a Comment