Wednesday 17 February 2016

நன்றி காதலே .....!!!

சிறை உடைத்த நான் 
மகிழ்ச்சி யின் மனச்சிறையில்
புது மகிழ்ச்சி கண்ட புராதன நாட்கள்... 

நினைவுகள் என்னோடு 
நேசங்களை பகிர்ந்துகொண்டு 
பாசங்கள் பரிசளித்த காலங்கள் ..

நட்பு அன்போடு கலந்து 
உறவுகளை எனக்கு அறிமுகபடுத்திய 
உன்னத நாட்கள்... 

விண்ணளவு பாசப்பிணைப்பை 
என் இதயம் சுமந்து 
சுகம் கண்ட தருணங்கள் ...

உணவு முதல்  ஊசி வரை 
என் பாசத்துக்கும் அன்புக்கும் பாலமாகி 
நட்பிற்கு நங்கூரம் அமைத்த 
நளினமான சுகங்கள் ......

அன்பின் முற்றிய அடுத்த நிலை 
என் நட்புக்கும் உறவுக்கும் 
சொந்தங்களுக்கும் சூரிய வெப்ப 
வேலி போட்டு சுட்டெரித்த 
சூழ்நிலை சுவடுகள் .....

நிஜம் என்பது நேசத்தின் நிகழ்காலம் 
நேசம் நட்பின் கடந்த காலம் என்பதை 
என் மனக்கண் மறைந்து இருந்து பார்த்து 
பரிதவித்த ரணங்கள் .....

எல்லாம் காதலே ....!
நீ செய்த சூழ்ச்சி ...

உன் மன்மத அன்பால் 
மனங்களின் அன்புக்கு 
மரண வாசகம் எழுதி விட்டாய் ...

காதலுக்கு வேலி இல்லை. 
அனால்.... 
என் நட்பு என்னும் 
வேலிக்கு 
போலி என்று 
புகழ் மாலை சூட்டிய..
உன் புண்ணிய அன்புக்கு 
நன்றி காதலே .....!!!

No comments:

Post a Comment