Saturday 7 March 2015

நண்பனோடு நகர்ந்த நேரம் .....

நாட்காட்டியில் முடிந்து போன 
பல மாதங்கள்..
நாள்தோறும் கடந்து போன 
பலவித மனிதர்கள் 
பலவித சோகங்கள் 
சில சில சந்தோசங்கள் ..
பலவித மாற்றங்களுக்கூடே
நம் மற்றுமொரு  புதிய சந்திப்பு .....

தொலைபேசி உரையாடல் இல்லை 
முகநூல் போன்ற புதிய தோழில் நுட்பம் வழியாய் 
நம் நட்பு உறவாட வில்லை .....

நம்முடன் நம் நட்பு மட்டுமே 
உறவு பாலமாய் உறைந்து இருக்கிறது ....

இருவரின் கண்களும் 
பகிர்ந்து கொண்ட 
வார்தைகள் போதும் 
உதட்டால் நலம் விசாரிக்க 
ஒன்றும் இல்லை ...

பகிர்ந்து  கொள்ள 
பல விஷயங்கள் உண்டு 
அனால் ....
நம் மனம் சந்தித்த 
மகிழ்ச்சி மழையில்
அனைத்தும் அடித்து செல்லப்பட்டு விட்டன .....

மனம் முழுவதும் 
மகிழ்ச்சி மட்டுமே 

எதிர்காலம் கடத்தகாலம் 
ஏன் நிகழ்காலம் கூட 
மறந்து தான் போனது 

கரங்கள் ஒன்று சேராமல் 
நம் மனங்கள் கைகோர்த்த படி 
நடை பயின்று கொண்டிருக்கிறோம் ....

நடக்கும் கால்களை போலவே 
நமக்கும் இலக்கு தெரியவில்லை ..

பாதை பணத்திற்கு முடிவு உண்டு 
நம் எண்ணத்தில் பயணித்து 
வார்த்தைகளில் முடியும் 
உரையாடல் களுக்கு முடிவு இல்லை....

அர்த்தமற்ற பல உரையாடல்களுக்கு 
நம் நட்பாம் சுவடியில் 
பல கோடி அர்த்தம் உள்ளது ..

ஏதேதோ பெசிக்கொண்டிருகிறோம் 

நகரும் நேரதிற்கும்
நம் இருவரையும் 
எதிர் பார்த்து காத்திருக்கும் 
நம் உறவுகளுக்கும் மட்டுமே 
தெரியும் நாம்
பேசிகொண்டிருக்கும் மணி நேரங்கள் ....

அடிக்கடி அழைக்கும் 
மனைவியின்  கைபேசி மணியோசை 
எங்களுக்காய் இன்னொரு உறவு 
காத்திருகிறது  என்பதை உணர்த்துகிறது ....

பேசிய ஒன்றும் நினைவில் இல்லை 
நினைவில் ஒன்றே ஒன்று தான் 
ஆம் அது மகிழ்ச்சிமட்டுமே  .....

நெடு நேரமாய் 
கடந்து போன நேரம் இப்பொழுது 
எங்களுக்கு  நினைவு படுத்துகிறது 

வீட்டில் சிரித்து கொண்டிருக்கும் 
குழந்தைகளுக்கும் 
காத்திருக்கும் மனைவிக்கும் 
இனி எங்கள் உறவு வேண்டும் என்று ...

பிரிந்து போகிறோம் 
எங்கள் உறவுகளோடு 
உறவாட ......

எங்கள் நட்பு ...
நீங்காமல் நங்கூரம் இட்டு 
மனமொடு 
மறுபடியும் ஓரமாய் ஒட்டி கொண்டது ....

மீண்டும் சந்திப்போம் நண்பனே ...
வரும் காலம் 
கண்டிப்பாய் வழங்கும் 
இன்று போல் ஒரு 
வசந்தநாளை ...... 

2 comments:

  1. அருமை.... ரசித்தேன்....

    வலையுலக வருகைக்கு வாழ்த்துக்கள் பல...

    ReplyDelete
    Replies
    1. என் நண்பன் நெல்லை பாஸ்கர் கவிதை தொகுப்பில் நீங்கள் வரும் போதே எனக்கும் ஒரு ஆசை . என் தொகுப்பிற்கும் நீங்கள் வந்து வாழ்த்துரைக்க வேண்டும் எண்டு . நீங்கள் வந்தது மிக்க மகிழ்ச்சி

      Delete