கதிரவன் ஒளியும் நீயே ...
கார்முகில் மழையும் நீயே ...
கார்முகில் மழையும் நீயே ...
பொன்வண்ண நிலவும் நீயே ..
பொங்கிடும் நதியும் நீயே ...
பொங்கிடும் நதியும் நீயே ...
வண்ணத்தின் அழகும் நீயே
வானத்தின் வனப்பும் நீயே ...
தழுவிடும் தென்றல் நீயே ..
தணித்திடும் குளிரும் நீயே ...
வானத்தின் வனப்பும் நீயே ...
தழுவிடும் தென்றல் நீயே ..
தணித்திடும் குளிரும் நீயே ...
சோலையின் செழுமை நீயே ..
காலையின் இனிமை நீயே ..
தருவின் நிழலும் நீயே...
தங்கத்தின் ஜொலிப்பும் நீயே ....
காலையின் இனிமை நீயே ..
தருவின் நிழலும் நீயே...
தங்கத்தின் ஜொலிப்பும் நீயே ....
காதலின் தவிப்பும் நீயே ..
கருணையின் உருவும் நீயே ..
இதயத்தில் துடிப்பும் நீயே ..
உதிரத்தின் ஓட்டம் நீயே ..
கருணையின் உருவும் நீயே ..
இதயத்தில் துடிப்பும் நீயே ..
உதிரத்தின் ஓட்டம் நீயே ..
காதலாய் கலந்தாய் நீயே
ஆதலால் என் மொத்தம் நினதே .......
ஆதலால் என் மொத்தம் நினதே .......
No comments:
Post a Comment