Saturday 31 January 2015

கண்ணீருக்கு கவலை இல்லை ...............

மாசு நிறைந்த இம்
மானுட தேசத்தில்
கலங்கிய கண்களுக்கும் 
களங்கமில்லா மனங்களுக்கும் தான் கவலை ......

உடைந்த பல இதயங்கள்
எழுதிய இரங்கற்பாக்கள் ....
கண்ணீர் துளிகளின்
கடைசி சங்கமத்தில்
பல நூறு பார்கடல்கள் ......
அங்கே ....
நூறு பரந்தாமன்கள்....
பள்ளி கொண்ட படி ....
விண்ணை முட்டும் அளவு
வேதனைகள்....
ஒரு பரந்தாமன் கூட
விஸ்வரூபம் எடுத்து
வேதனையை விரட்ட வில்லை ....
கண்கள் அளக்கும்
அனைத்தும் இதயத்தை
காய படுத்தினால்
கடல் அளவு
கண்ணீர் என்பது
நம் கற்பனையில்
கொஞ்சம் தான் ......
பசி , பிணி யால் வரும்
உயிர்வதைக்கும்
கண்ணீரின் அளவு ....
உறவுகளால் வரும்
உள் காயத்தால் வரும்
கண்ணீரில் பலமடங்கு குறைவு ....
வேதனை களை சுமந்தும்
இறுகிய இதயதில்
இருந்து உருகியும்
சதை களை வருடிய படி
சல்லாப உல்லாசமாய்...
ஓடி விளையாடும்
கண்ணீருக்கு என்ன கவலை .....
காயப்பட்டு ....
கனத்து போய்
கவலை கொள்ளும் ...
மனதிற்கு மட்டும் தான் கவலை ..........

No comments:

Post a Comment