மை பூச விழி ரெண்டும்
மறுத்து நிற்குது ..
மறுத்து நிற்குது ..
நடனமாடும் நற் கூந்தல்
நாட்டம் மறுக்குது ....
நாட்டம் மறுக்குது ....
கண் துஞ்ச மறுக்குது -இரு
கால் நடக்க மறக்குது ....
கால் நடக்க மறக்குது ....
மலர் மணம் வெறுக்குது ..
மனம் தினம் தினம் நோகுது ...
மனம் தினம் தினம் நோகுது ...
பசி யது விலகுது -நல்ல
ருசியது மறக்குது
ருசியது மறக்குது
இடை வருடும் மேகலை -தன்
இடம் விட்டு நகருது ....
இடம் விட்டு நகருது ....
மது ஊறும் இதழ் அமுதம்
கொடும் நஞ்சாய் மாறி போனது...
கொடும் நஞ்சாய் மாறி போனது...
பசலை யாம்
நோய் என்னை....
பாடாய் யன்றோ படுத்துது .....
நோய் என்னை....
பாடாய் யன்றோ படுத்துது .....
No comments:
Post a Comment