Saturday 31 January 2015

பசலை நோய் ....

மை பூச விழி ரெண்டும்
மறுத்து நிற்குது ..
நடனமாடும் நற் கூந்தல்
நாட்டம் மறுக்குது ....
கண் துஞ்ச மறுக்குது -இரு
கால் நடக்க மறக்குது ....
மலர் மணம் வெறுக்குது ..
மனம் தினம் தினம் நோகுது ...
பசி யது விலகுது -நல்ல
ருசியது மறக்குது
இடை வருடும் மேகலை -தன்
இடம் விட்டு நகருது ....
மது ஊறும் இதழ் அமுதம்
கொடும் நஞ்சாய் மாறி போனது...
பசலை யாம்
நோய் என்னை....
பாடாய் யன்றோ படுத்துது .....

No comments:

Post a Comment