Saturday 31 January 2015

மரித்துப்போன மனிதநேயம் ...

கொட்டும் மழையில்
குடை பிடித்தபடி நான் நடக்க ....
குளிரில் நடுங்கியபடி
குத்து செடியோரம்
குத்தவைத்து இருக்கும் 
கூன் விழுந்த மூதாட்டியை பார்த்து ..
"பாவம்" என்று
பாசாங்கு வார்த்தை
பகன்று விட்டு ....
பத்து நொடிகள்
பாசப்பார்வை பார்த்துவிட்டு ....
பணிச்சுமை என்று
பரிதாபம் மட்டும் காட்டும்....
என்னிடமும் ....
மனித நேயம் மரித்து தான் போய்விட்டது .......

No comments:

Post a Comment