Saturday 31 January 2015

இது தான் உண்மை காதலோ ....?

நதிக்கரை மணலில்
நீயும் நானும் .....
நீ...
கரை மணலை ஏடாக்கி 
காலால் கவிதை வரைந்து கொண்டிருக்கிறாய் .....
நான்....
கவிதையை கண்முன்னே
கண்டு கொண்டு
கற்பனையில் கம்பனாகிறேன் .....
நம் இருவர்
உள்ளத்து உள்ளுவதும்
காவியம் பல கண்டு ..
கவி பல வென்று ...
ஆதாம் தொடங்கி
அழியாமல் நிற்கும் ..
காதல் தான்.....
உன் தாய் தந்த
நாணத்தால் தயங்கும்
உன் உதடுகளுக்கு .....
உதவிட மறுக்கும்
உன் முகத்தை
பார்த்த
தரை மணல் ...
தவழ்ந்து வரும்
தத்தை யாம்
தண்ணிய நீரில்
தானாக கரைந்தது .....
என் மூச்சில் வரும்
காற்று கூட
உன் முகத்தை
பார்க்கும் ஆவலில்
உன் முன்னே நிற்கிறது ....
மௌனங்கள் மட்டும்
மௌனமாய் பெசிக்கொண்டிருகிறது .....
நொடிகள் நிமிடமாகி
நிமிடம் மணியாகி
நிசப்தம் மட்டும் நிஜமாகிறது .....
நிற்பது இருவரும்
நம் மனம்
நதி தாண்டி
வனம் தாண்டி
கடலை கடந்து
காதல் சொல்கிறது .....
உதடு உணர்த்தாத
நம் உன்னத காதலை ....
உம் ....
என்ற உச்சரிப்போடு
திரும்பி செல்லும் போது..
நம் உள்ளம் உணர்த்துகிறது ........
நம் கால்கள்
கடந்து செல்லும் போது ..
கண்ணீர் வழியே
நம் காதல்
நம்மோடு ஒட்டிகொண்டது ....
ஓ....
இது தான் உண்மை காதலோ ....?

1 comment:

  1. உன் முகத்தைப் பார்த்த தரைமணல் -நாணத்திற்கு நீ கண்ட நளினம் அற்புதம்

    ReplyDelete