Sunday 1 February 2015

அம்மா ....

வார்த்தைகள்  கோர்த்து 
வர்ணனை செய்ய முடியாத 
வானுயர்ந்த படைப்பவள்....

வளம் கொஞ்சும் 
வாசனை மலர் தோட்டம் ..
வரிசையாய் நின்றாலும் 
ஈடு செய்யா
எழில் அவள் .....

பாசமோடு நேசத்தையும் 
நட்போடு உறவைவும் 
பற்று கொண்டு இணைத்தாலும்..
பதிலீடற்ற பாலவள்.

எண்கள் முடிவினும் 
எண்ணி முடித்திடா..
எல்லை இன்றி விரிந்தவள் ...

காலமெல்லாம்,..
நம்முடனே ..
கடவுளாய் வாழ்ந்திடும் 
நம் நலம் நாடும் 
அன்னையவள் .......

3 comments: